“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” رَّبِّ زِدْنِي عِلْمً -அல் குர்ஆன் : 20 -114
கல்வி கற்றவர்களாக இருங்கள் ; கற்றுக்கொடுப்பவர்களாக இருங்கள்;
கற்பவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களாக இருங்கள் - நபி மொழி

Tuesday, February 15, 2011

கோவிந்தகுடி அரசு உயர்நிலை பள்ளிக்கு இரும்பிலான நுழைவு வாயில்

சவுதி மற்றும் துபாய் வாழ் நண்பர்கள் சார்பாக கோவிந்தகுடி அரசு உயர்நிலை பள்ளிக்கு இரும்பிலான நுழைவு வாயில் அமைத்து தரப்பட்டுள்ளது.
அதற்கான   சிமென்ட் தூண் அமைக்கும் செலவை கோவிந்தகுடி வாழ் நண்பர் M . ஷாஜஹான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

இன்றைய ஹதீஸ்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'



(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்'.


என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 
Volume :6 Book :69 Shahih Bukhari

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:



நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்.


என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Volume :3 Book :55  Shahih Bukhari